பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு bharathidasan history in tamil

பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு bharathidasan history in tamil

பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள் புரட்சிக்கவி என்றும் பாவலர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதங்களை முறையாக கற்று தமிழ் மொழிக்கு தொண்டாற்றியவர். தமிழ் ஆசிரியர் கவிஞர் அரசியல்வாதி கதாசிரியர் எழுத்தாளர் கவிஞர் என்று பல்வேறு வலிகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்றால் அது மிகையாகாது.

பாரதிதாசன் பிறப்பு

bharathidasan history in tamil

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி 1891 ஆம் ஆண்டு கனக சபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மையார் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். அவரது தந்தை ஊரில் பெரிய வணிகராக இருந்தார். அவரின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரில் உள்ள முதல் பாதையை எனக்கு கனகசுப்புரத்தினம் என்று அழைக்கப்பட்டார்.

இளம்பருவம்

இளம் வயதில் இருந்தே தமிழ் மொழியில் அதீத பற்று கொண்டிருந்தார். புதுவையில் பிரெஞ்சுக்காரர்களின் அதிகத்தால் பிரஞ்சு பள்ளியில் சேர்ந்தார். தொடக்க கல்வியை ஆசிரியர் திருப்பள்ளி சாமி ஆசிரியரிடம் கற்றார். புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாக கற்றார் பின்னர் தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால் அங்கு சென்று அவர் தமிழ் மொழியில் பாடம் கற்றார். சிறுவயதிலேயே சுவைமிக்க அழகான பாடல்களை எழுதும் திறன் பெற்றிருந்தார் பள்ளி படிப்பை நான்கு கற்றுத் தேர்ந்தவர்.

தனது 16 வது வயதில் புதுவையில் உள்ள கல்லூரியில் சேர்ந்து தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும் அவரது தமிழ் புலமையையும் வெளிப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும் அவரது விடாமுயற்சியாலும் தேர்வில் முழு கவனம் செலுத்தியதால் மூன்று ஆண்டுகளில் முடிக்கக்கூடிய இளங்கலை பட்டத்தை இரண்டு ஆண்டுகளில் முடித்து முதலிடம் பெற்றார்.

தமிழ் புலமை

இளமை வயதிலேயே அவரிடம் தமிழ் புலமை அதிகமாக இருந்ததால் கல்லூரி முடித்தவுடன் அவர் 1919 இல் காரைக்கால் சேர்ந்த அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றினார். 1920 ஆம் ஆண்டில் பழனிய அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி 1928 ஆம் ஆண்டு மன்னர் மன்னன் என்ற குழந்தை பிறந்தான். அதன் பிறகு சரஸ்வதி வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர். தமிழ்மொழி மீது பற்று கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள் அவர்களது மானசீக குருவான சுப்பிரமணிய பாரதியை கருதினார் அவரது பாடலை தனது நண்பனின் திருமணத்தின்போது பாடிய அவர் பாரதியை சந்திக்கவும் செய்தார்.

பெயர் மாற்றம்

பாரதியிடமிருந்த பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல் அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு அன்று முதல் அவர்தானது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பது பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார் பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல் வருதிதாசன் என்ற பெயரிலேயே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார்.

சுதந்திர போராட்டம்

bharathidasan history in tamil

சுதந்திர போராட்ட சூழல் நிலவியதால் அவர் திராவிட தொண்டன் என்பதால் பெரியார் மற்றும் அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்ட பலமுறை சிறைக்கு சென்றார் அவரது இலக்கிய நடையை கண்ட வியந்த திரைப்படத் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வாய்ப்புகள் வழங்கியதால் அவர் திரைப்படங்களுக்கும் கதை வசனம் எழுதியுள்ளார் பெருந்தலைவர்களான அண்ணாதுரை கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்தாலும் 1954 ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஐந்து ஆண்டுகளுக்கு செம்மையாக செயல்படுகின்ற அவர் 1960 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவினார்.

பாரதிதாசனின் படைப்புகள்

எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ் மொழிக்கு வழங்கியதாகவும் சாதி மறுப்பு கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்கள் மனதில் இருந்து அளிக்கும் விதமாக பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், குறிஞ்சி திட்டு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு,தமிழ் இயக்கம், இசையமுது, குயில், தமிழச்சியின் கத்தி, பாண்டியன் பரிசு, பாரதிதாசன், ஆத்திச்சூடி, பெண்கள் விடுதலை, பிசிராந்தையன்,மயிலை ஸ்ரீ சுப்ரமணியம் துதி அமுது, முல்லைக்காடு, கலை மன்றம், விடுதலை வேட்கை மற்றும் பல நூல்களை எழுதியுள்ளார்.

விருதுகள்

பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார் புரட்சிக்கவிஞர் என்ற பட்டமும் அறிஞர் அண்ணா புரட்சிக்காவி என்ற பட்டமும் வழங்கினார் தமிழ்நாடு மாநில அரசாங்கம் அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு பாரதிதாசன் விருதுகளை வழங்கி வருகிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகமும் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது. 1946 இல் அவரது அமைதி ஊமை என்ற நாடகத்திற்கு அவர் தங்க கிளி பரிசு வென்றார். 1970 ஆம் ஆண்டு அவரது மரணத்திற்கு பின் அவரது பிசிராந்தையர் நாடகத்திற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி சென்னை தபால் துறை மூலமாகவும் ஒரு நினைவு அஞ்சல் தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் திரைப்பட கதாசிரியர் கவிஞர் அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற தேன் சுவை சொட்டும் பாடல்வரிகளுக்கு சொந்தக்காரர். தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியிடம் அர்ப்பணித்துக் கொண்டார். மகாகவி பாரதியார் வரிசையில் பாவேந்தர் பாரதிதாசன் என்னும் தமிழ் ஆளுமை திகழ்ந்தார் என்று குறிப்பிட்டார் அது மிகையாகாது

தொடர்புடயவை: டாக்டர் அப்துல் கலாமின் வாழக்கை வரலாறு