![](https://www.10factstamil.com/wp-content/uploads/2022/12/Death-of-Swami-Vivekananda.jpg)
சுவாமி விவேகானந்தர் பிறப்பு
![](https://www.10factstamil.com/wp-content/uploads/2022/12/06-1438837157-2swami4.jpg)
சுவாமி விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி மகர சங்கராந்தி பண்டிகையின் போது பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரான கல்கத்தாவில் உள்ள அவரது மூதாதையர் வீட்டில் ஒரு பெங்காலி குடும்பத்தில் நரேந்திரநாத் தத்தா (நரேந்திரா அல்லது நரேன்) பிறந்தார்.
அவரது தந்தை, விஸ்வநாத் தத்தா, கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக இருந்தார் மற்றும் அவரது தாத்தா துர்காசரண் தத்தா ஒரு சமஸ்கிருத மற்றும் பாரசீக அறிஞர் ஆவார், அவர் தனது குடும்பத்தை விட்டு வெளியேறி இருபத்தைந்து வயதில் துறவியானார். அவரது தாயார் புவனேஸ்வரி தேவி, பக்திமிக்க இல்லத்தரசி.நரேந்திரனின் தந்தையின் முற்போக்கான, பகுத்தறிவு மனப்பான்மையும், அவனது தாயின் மதக் குணமும் அவருடைய சிந்தனையையும் ஆளுமையையும் வடிவமைக்க உதவியது.
விவேகானந்தரின் உண்மையான பெயர் என்ன
![](https://www.10factstamil.com/wp-content/uploads/2022/12/Vivekananda-1897.webp)
விவேகானந்தர் என்பது அவரே வைத்துக் கொண்டே பெயரே சுவாமி விவேகானந்தர் என்ற பெயரை ஒரு துறவியாக மாறிய பின்பு அவரே வைத்துக் கொண்டார். உண்மையிலேயே அவருக்கு விரேஷ்வரா என்ற பெயரை அவர் தாய் வைத்தார். அவரை செல்லமாக ‘பில்லி’ என அழைத்து வந்தனர். பின் அவருக்கு நரேந்திர நாத் தட்டா என்ற பெயரை வைத்தனர்.
விவேகானந்தரின் குடும்ப நிலை
![](https://www.10factstamil.com/wp-content/uploads/2022/12/06-1438837170-4swami5.jpg)
சுவாமிஜியின் குடும்பம் கடும் வறுமையில் வாழ்ந்தது தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு, சுவாமிஜியின் குடும்பம் கடும் வறுமையில் வாழ்ந்தது. ஒரு வேளை உணவிற்கே அவரின் தாயும் சகோதரிகளும் போராட வேண்டியிருந்தது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உணவு கிடைக்கும் என்பதால், பெரும்பாலும் பல நாட்கள் அவர் உண்ணாமலேயே இருந்தார்.
தேநீர் மீது காதல்
![](https://www.10factstamil.com/wp-content/uploads/2022/12/06-1438837182-6swami3.jpg)
தேநீர் மீதான விவேகானந்தரின் காதல் தேநீரின் ரசிகனாக இருந்து வந்தார் விவேகானந்தர். அக்காலத்தில் தேநீர் குடிப்பதை எதிர்த்தனர் இந்து பண்டிதர்கள். ஆனால் தன் மடத்தில் இவர் தேநீரை குடிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினார்.
குருவை நம்பவில்லை
![](https://www.10factstamil.com/wp-content/uploads/2022/12/06-1438837194-8ramakrishna.jpg)
ராமகிருஷ்ணரை அவர் முழுவதுமாக நம்பவில்லை ராமகிருஷ்ண பரமஹம்சர் தான் சுவாமி விவேகானந்தர்வின் குரு ஆவார். ஆரம்ப கால கல்வியின் போது, விவேகானந்தர் அவரை முழுவதுமாக நம்பவில்லை. அவர் சொன்னவைகள் அனைத்திற்கும் விடை கிடைக்காதவரை, அவர் சொல்லிக் கொடுத்த அனைத்தையும் சோதித்துக் கொண்டே இருந்தார் விவேகானந்தர்.
சாவை கணித்தார் சுவாமி விவேகானந்தர்
தன் சொந்த சாவை சுவாமிஜி முன்னரே கணித்தார் ஃபிரெஞ்ச் ஒபேரா பாடகியான ரோசா எம்மாவிடம் தான் ஜூலை 4-ஆம் தேதி இறந்து விடலாம் என எகிப்தில் வைத்து விவேகானந்தர் அறிவித்துள்ளார். அதே போல் 1902-ஆம் ஆண்டு, ஜூலை 4-ஆம் தேதி அவர் இறந்தார்.
31 வியாதிகள்
![](https://www.10factstamil.com/wp-content/uploads/2022/12/Vivekananda-1.webp)
தான் இறப்பதற்கு முன்பு, 31 வியாதிகளை கொண்டிருந்தார் சுவாமிஜி புகழ் பெற்ற பெங்காலி எழுத்தாளர் எழுதிய ‘தி மான்க் அஸ் ஏ மேன்’ புத்தகத்தின் படி, சுவாமி விவேகானந்தர் 31 வியாதிகளை கொண்டிருந்தார். தூக்கமின்மை, ஈரல் மற்றும் சிறுநீரக நோய், மலேரியா, மைக்ரைன், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் போன்ற சில தான் விவேகானந்தர் தன் வாழ்வில் சந்தித்த அந்த 31 உடல்நல பிரச்சனைகள் என அந்த புத்தகம் பட்டியலிட்டுள்ளது. பல முறை, தாங்கிக் கொள்ள முடியாத ஆஸ்துமா நோயாலும் கூட அவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இறப்புக்கான காரணங்கள்
அவரது மூளையில் ரத்த நாளம் உடைந்ததே மரணத்துக்குக் காரணம். அவர் மகாசமாதி அடையும் போது அவரது பிரம்மராந்திரா (அவரது தலையின் கிரீடத்தில் ஒரு திறப்பு) துளைக்கப்பட்டதால் உடைப்பு ஏற்பட்டதாக அவரது சீடர்கள் நம்பினர் . விவேகானந்தர் நாற்பது ஆண்டுகள் வாழமாட்டார் என்ற தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்.
சுவாமி விவேகானந்தரின் தகனம்
பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ணர் தகனம் செய்யப்பட்ட இடத்திற்கு எதிரே, பேலூரில் உள்ள கங்கைக் கரையில் சந்தன மரத்தின் மீது அவர் தகனம் செய்யப்பட்டார்.
சுவாமி விவேகானந்தரின் தகனம்
பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ணர் தகனம் செய்யப்பட்ட இடத்திற்கு எதிரே, பேலூரில் உள்ள கங்கைக் கரையில் சந்தன மரத்தின் மீது அவர் தகனம் செய்யப்பட்டார்..