எகிப்து நாட்டை பற்றிய ஆச்சரியமான விடயங்கள் top 10 facts about egypt in tamil

                  எகிப்து நாடு பற்றிய உண்மைகள்

egypt
வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் நாம் பிரமீடுகளுக்கும் பதபடுத்தபட்ட பிணங்களாகிய ம்மமிகளுக்கும் புகழ்பெற்ற நாடான மற்றும்  பண்டைய நாகரிகங்களில் மிகவும் சிறப்புபெற்ற  ஒரு  நாடுதான்  எகிப்து இந்த எகிப்து பற்றிய(facts about egypt) பல்வேறு மர்மமான மற்றும் ஆச்சரியமான உண்மைகள் பற்றி காணலாம்.

எகிப்து நிலப்பகுதி

வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியவிற்கு இடையெ உள்ள நாடுதான் இந்த எகிப்து உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட இடத்தில் 15- வது இடத்தில் உள்ளது,இங்கு வாழும் மக்களில் 90% பேர் இஸ்லாமியர்கள்தான் இந்த எகிப்து நாட்டின் தலைநகரம் கைரோ இது உலகின் பழமையான தலைநகரங்களில் ஒன்றாகவும் இருந்துள்ளது.  இந்த நாட்டில் வசிக்கூடிய மக்கள் பெரும்பாலும் நைல் நதிக்கரையிலே வசித்து வருகின்றனர் ஆம் கிட்டதட்ட 80% மேலானோர் எகிப்தின் வெறும் 5% நிலப்பகுதியிலேயே வசித்துவருகின்றனர் மிச்சமுள்ள நிலங்கள் பாலைவனங்களாகவே உள்ளன.

எகிப்து மக்கள்

egypt
பண்டைய கால எகிப்திய மக்கள் கண்ணில் மை இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் ஆண்களும் சரி பெண்களும் சரி மை இடுவது வழக்கம் இதற்கான காரணம் இவர்கள் பாலைவன பகுதிகளில் வாழ்ந்ததால் கண்க் வறண்டுவிடும் அதன்காரணமாகதான் கண்களுக்கு ஒரு திரவியம் போன்ற மையை பயன்படுத்தினர் இந்த மையை உருவாக்க அவர்கள் தேனையும் மனித மூளையையும் பயன்படுத்தினர். இதுமட்டுமல்லாமல் எகிப்திய மக்களுக்கு உடலில் முடி இருப்பதை விரும்ப மாட்டார்கள் அதனால் உடலில் உள்ள அனைத்து முடிகளையும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும்  எடுத்து விடுவார்கள் புருவ முடியை கூட எடுத்துவிடுவார்களாம், நீங்கள் படத்தில் காண்பது செயற்கையாக செய்யபட்ட முடிகள் அதாவது விக்குகள் ஆகும்.

பூனைப்போர்

cat war
 கி.மு 525 ஆம் ஆண்டில் மிகப்பெரிய பலம் பொருந்திய எகிப்திற்கும் அண்டை நாடான பெர்ஷிய நாட்டிற்கும் இடையே போர் மூண்டது இந்த போரில் பெர்ஷியாவானது  படைவீரர்களுடன் சேர்த்து பூனைகளையும் எடுத்து சென்றது எதற்கு இவர்கள் பூனையை எடுத்து செல்கிறார்கள் என சந்தேகம் எழலாம் எகிப்தியர்கள் பூனைகளை கடவுளாக வழிபடுபவர்கள் அதானல் போரில் பெர்ஷிய படை வீர்ர்கள் எகிப்தியர்கள் கண்முன்னால் அவர்கள் கடவுளாக வணங்கக்கூடிய பூனையை கொண்றனர் இதனால் மனமுடைந்த எகிப்து வீரர்கள் அந்த போரில் சரியாக சண்டை செய்யாமல் தோற்கடிக்கப்பட்டனர். இது பெர்ஷியாவின் அபரிவிதமான போர் தந்திரத்தை வெளிப்படுத்துகிறது.

எகிப்தின் கருதரிப்பு பரிசோதனை

egypt pregnany test

எகிப்து நாட்டில் கருதரிப்பு பரிசோதனை(PREGNANCY TEST) என்பது மிகவும் வித்தியாசமான முறையில் இருந்துள்ளது எந்த அளவுக்கு வித்தியாசமானது என்றால் கருவுற்ற பெண்ணை ஒரு கோதுமை செடியின் மீது சிறுநீர் கழிக்க சொல்வார்களால். அந்த செடி இறந்து விட்டால் பெண் கருவுறவில்லை எனவும் அதுவே அந்த செடி வளர ஆரம்பித்தால் அந்த பெண் கருவுற்றுருக்கிறார் என்றும் முடிவு செய்வார்களாம், இதற்கு பின்னால் இருக்ககூடிய அறிவியல் காரணம் மிகவும் எளிமையானது கருவுற்ற பெண்ணின் சிறுநீரில் அதிகபடியான புரதங்கள் காணப்படும் இது செடிக்கு உரமாக அமையும் அதுவே கருவுறாத பெண்ணிண் சிறுநீரில் அதிகபடியான உப்பதன்மைகொண்ட அமிலங்கள் காணப்படும் இது செடியை கொன்றுவிடும்.

எகிப்து பிரமீடுகள்

egypt

இந்த எகிப்து என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது இந்த பிரமீடுகள் பண்டைய அதிசயங்களில் ஒன்றான மற்றும்  கட்டிடகலைக்கு சிறந்த எடுத்துகாட்டாக இந்த எகிப்து பிரமீடுகள் திகழ்கின்றன. இவை கிட்டதட்ட 5000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று நம்பபடுகிறது. இதுவரை இந்த பிரமீடுகள் பற்றிய ஆராய்ச்சியில் வெறும் 20% மட்டுமே நடத்தபட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. நீங்கள் எகிப்தில்தான் அதிகமான பிரமீடுகள் இருக்கும் என நினைத்திருக்கலாம் ஆனால் உண்மையில் சூடான் நாட்டில்தான் அதிகபடியான பிரமீடுகள் காணப்படுகின்றன. இந்த எகிப்தில் காணப்படும் பிரமீடுகள் பேரோ வம்சாவளி மன்னர்களின் உடலை பதப்படுத்தி வைப்பதற்காக கட்டப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

 

எகிப்தின் வீரர்கள்

egypt

எகிப்தில் ஒரு ஆண்மகன் தன்னை வீரன் என நிரூபிக்க பல்வேறு சோதனைகளை செய்ய வேண்டும் அதில் முக்கியமான ஒன்றுதான் ஆணுறுப்பு நசுக்கபடுவது ஆம் ஒரு ஆண்மகன் தன்னை வீரன் என நிருபிக்க வேண்டுமானல் அவன் உடலில் ஏற்படக்கூடிய உச்சபட்ச வலியை அவன் பொருத்தாக வேண்டும் என்பதே எகிப்தின் சட்டம். அதுவும் இந்த சடங்கு பல மக்கள் முன்னிலையில் ஒரு ஆணின் ஆணுறுப்பு ஒரு கல்போன்ற பொருளால் நசுக்குவார்கள் அதில் யார் அதிக நேரம் வலியை தாங்குகிறார்களோ அவர்களையே வீரர்கள் என அறிவிப்பார்கள்.

 

எகிப்தின் மம்மி முறை 

egypt mummy

பண்டைய கால எகிப்தியர்களிடம் இருந்த  மிக முக்கியமான நம்பிக்கை என்னவென்றால் இறந்த மன்னர்களுக்கு மறுபிறவி உண்டு என்பதுதான் அதானால் அவர்கள் இறந்த மன்னர்களின் உடலை பதப்படுத்துகின்றனர். இறந்தவர்களின் உடலில் மூளையை தவிர மற்ற உருப்புகள் அனைத்தையும் சோடியம் நிறைந்த குடுவையில் வைப்பார்கள் ஆனால் இதயத்தை உடலிலேயே விட்டுவிடுவார்கள் . இறந்தவர் உடலின் மூளையை மூக்கில் குச்சி போன்ற பொருளை அனுப்பி மூளையை உறிஞ்சி எடுத்துள்ளார்கள். எகிப்தியர்கள் இதயத்தை  பதப்படுத்தாதற்கான காரணம் அவர்கள் நாம் யோசிக்க காரணம் இதயம் என நம்பினார்கள் அதானல் அதை மட்டும் அவர்கள் எடுக்கவில்லை. 

 
                                                                நன்றி!