அட்சய திருதியை

அட்சய திருதியையில் ஏன் நகை வாங்க வேண்டும் akshaya tritiya in tamil

அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமல்ல எது வாங்கினாலும் அது மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை ஆகும். அந்த வகையில், அட்சய திருதியை தினமான இன்று ஏராளமானோர் நகை வாங்க நகைக்கடைகளில் குவிந்து வருகின்றனர். அட்சய திருதியை என்றால் என்ன? ஏன் அன்றைக்கு நகை வாங்கினால் செல்வம் சேரும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

அட்சய திருதியை என்றால் என்ன?

அட்சய திருதியை

அக்ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். மேலும், இந்த நாள் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

அட்சய திருதியை ஏன் கொண்டாடபடுகிறது ?

அட்சய திருதியை தங்கம்

அட்சயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். மேலும், இந்த நாள் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. அட்சய திருதியையில் ‘குண்டுமணி நகையாவது வாங்க வேண்டும்’ என்ற எண்ணம், மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது

அட்சய திருதியை பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நகைக்களில் தங்கம் வாங்க ஏராளமானோர் குவிந்துள்ளனர். நகைக்கடைகளில் தங்கம் விற்பனைக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்கம் விலையும் சற்றே குறைந்துள்ளதால் நகை வாங்க மக்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது.

அட்சய திருதியை வரலாறு

அட்சய திருதியை

அட்­சய திரு­தியை நாளில் தொடங்­கப்­படும் எந்­த­வொரு முயற்­சி­யும் தொடர்ச்­சி­யாக வளர்ந்து நன்­மை­யைக் கொடுக்­கும் என்­கிறது சாஸ்­தி­ரம். என­வே­தான் புதிய வணி­கத்தை­ தொடங்­கு­வது, புதுவீடு குடி புகுவது, நகை­கள், தானி­யங்­கள் வாங்­கு­வது, திருமணப் பேச்சு வார்த்தையை எடுப்பது உள்ளிட்ட சுப­கா­ரி­யங்­களை இந்நாளில் தொடங்க பல­ரும் விரும்­பு­கின்­ற­னர்.

இருப்பினும், இந்­நா­ளில் கண்­டிப்­பாக தங்­கம் வாங்­க­வேண்­டும் என்­பது பல­ரது உறுதியான எண்­ண­மா­க­வும் உள்­ளது.இது­போல் தங்­கம் வாங்­கி­னால் ஆண்டு முழு­வ­தும் தங்­கம் வாங்கிக்கொண்டே இருக்கலாம் என்றும் நினைக்கின்றனர்.

அட்­சய திரு­தியை என்­பது வெறும் தங்­கம், வெள்ளி வாங்­கு­வது மட்­டு­மன்று.அப்படியே தங்­கம், வெள்ளி என எந்­தப் பொருள்­களை வாங்­கி­னா­லும் அவ­ர­வர் சக்­திக்குத் தகுந்­தாற்­போல் தானம் செய்ய வேண்டும். இல்லாதவர்களுக்கும் ஏழைகளுக்கும் இவற்றை முடிந்த அள­வில் தானம் செய்வது பல மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரும்.

இதுபோல் தங்க நகை வாங்க முடியாதவர்கள், அன்­றைய தினம் அரிசி, கல் உப்பு, சீனி, மஞ்­சள் வாங்­கி­னா­லும் தங்­கம் வாங்­கியதற்கேற்ற பலன் கிடைக்கும் என நம்பபடுகிறது. உண்­மை­யில், அட்­சய திரு­தியை நாளில், முடிந்த அள­வில் தான தர்­மங்­கள் செய்­ய­வேண்­டும் என்­ப­தையே சாஸ்­தி­ரங்­கள் வலி­யு­றுத்தி உள்­ளன.

அன்­றைய தினத்­தில் நீர்­ மோர், பழங்­கள், நவ­தா­னி­யங்­க­ள், அரிசி, பருப்பு, கோதுமை, ஆடை, விசிறி, பாடப்­புத்­த­கங்­கள், அன்­னம், பசு ஆகி­ய­வற்றையும் தான­மா­கக் கொடுக்­க­லாம் என்று முன்­னோர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.இப்படி எந்த தானமும் செய்ய முடியாது என்று சொல்பவர்கள், ஒரு கைப்­பிடி உணவை எறும்பு, பற­வை­க­ளுக்குத் தீனி­யா­கப் போட­லாம்.

அட்சய திருதியை

அட்­சய திரு­தியை அன்று இரண்டு முக்­கி­ய­ விஷ­யங்­க­ளைப் பின்­பற்­றும்­படி ஆன்­மீகத் தலை­வர்­கள் கூறி­யுள்­ள­னர். இன்­றைய தினம் வெண்­மை­யான நிறங்­களில் பொருள்களை வாங்­கும்­படி கூறி­யுள்­ள­னர்.உப்பு, சீனி, அரிசி, வெண்மை நிற பூக்­கள், வெண்­ணிற ஆடை­களை வாங்­கு­ம்படியும் இரண்­டா­வ­தாக, அன்­ன­தா­னம் செய்­யும்­படியும் சொல்லி உள்­ள­னர்.

அட்­சய திரு­தி­யை­யில் வெள்ளி நகை­கள், வெண்மை நிற பூக்­களை வாங்­க­லாம். வெண்­ணிற உணவு­களைத் தானம் செய்­ய­லாம் என்றும் குறிப்­பிட்­டுள்­ள­னர். பாண்­ட­வர்­கள் தங்­க­ளின் வன­வாச காலத்­தில் அட்­சய பாத்­தி­ரம் பெற்­றது அட்­சய திரு­தியை தினத்­தன்­று­தான். இந்நாளில்தான் மணி­மே­கலை அட்­சயப் பாத்­தி­ரம் பெற்­றார். இந்த தினத்தில்­தான் குபே­ரன் நிதி கல­சங்­களைப் பெற்­றார்.

வட­மா­நி­லங்­களில் அட்­சய திரு­தியை தினத்­தன்று திரு­ம­ணம் நடத்­து­வதை புனி­த­மாகக் கரு­து­கி­றார்­கள்.ஹரி­யானா, பஞ்­சாப்­பில் அதி­க­மாக உள்ள ஜாட் ­இ­னத்­த­வர்­கள் அட்­சய திரு­தியையில் மறக்­கா­மல் மண் வெட்டி எடுத்­துக்கொண்டு வய­லுக்குச் செல்­வார்­கள்.

இத்தினத்தில் முன்னோர்களை வழிபாடு செய்வதும் சூரியனை வழிபாடு செய்வதும் முக்கியம் என்றும் தகவல்கள் குறிப்பிட்டு உள்ளன.

அட்சய திருதியை நாளில் செல்வ வளம் பெருகி சிறப்பாக வாழ, மங்களப் பொருட் களில் ஏதேனும் ஒன்றை வாங்குவது நல்லது. ஆலயங்களில் ஏலம் போடும் பொழுது, அதிக விலை கொடுத்து உப்பு வாங்குவார்கள். கல் உப்பு வாங்கினால் பணம் சேரும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் அட்சய திருதியை நாளில் பொன், பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் மட்டுமன்றி உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள் வாங்கலாம். மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி வகைகள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கி வைக்கலாம்.

தொடர்புடையவை: தங்கம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்

நகைகடைகளில் கூட்டம்

2 ஆண்டுகளுக்கு பிறகு அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் விற்பனை நடைபெறுவதால் பொது மக்களும் தங்கம் வாங்க அதிக ஆர்வமாக உள்ளனர். பொது மக்களின் வசதிக்காக சென்னையில் அதிகாலை 4.30 மணி முதலே நகைக்கடைகள் திறக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தங்கம் வாங்க நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *