soup

ஆட்டுக்கால் சூப் மருத்துவ பயன்கள்


பொதுவாக ஆட்டுக்கால் சூப் பார்த்தீங்கன்னா, மூட்டு வலி, முதுகு வலி, மூட்டு தேய்மானம் போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்படுறவங்களுக்கு, மிகவும் நல்லது என, பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அவர்களுக்கு மட்டும் இல்லாமல், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் அதிக நாட்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டு, உடல் மெலிந்தவரின், உடலை தேற்றுவதற்கும் கூட, மிகச்சிறந்த, ஒரு ஊட்டச்சத்துள்ள, ஒரு பானம், இந்த ஆட்டுக்கால் சூப். அப்படி, இந்த ஆட்டுக்கால் சூப்ல, என்ன சத்து இருக்கு? அப்படின்னு பாத்தீங்கன்னா, கொலாஜின், அப்படின்னு சொல்லக்கூடிய, கொழகொழப்பான, எண்ணெய் போன்று இருக்கக்கூடிய, புரதச்சத்து, அதிகம் இருப்பதுதான், காரணம். இந்த கொலாஜின் சத்து, நம் உடம்பில் இருக்கக்கூடிய, எலும்புகள், தசைகள், தசை நார்கள், நரம்பு மண்டலம் என, அனைத்து உறுப்புகளுக்குமே, மிகவும் அவசியமான ஒரு சத்து. இந்த கொலாஜின் பாத்தீங்கன்னா, ஆட்டுடைய எலும்புகள், மற்றும் மூட்டு எலும்புகள்ல வந்து, அதிக அளவுல இருக்கு. இது தவிர, வேற என்னென்ன சத்துக்கள் இருக்கு? அப்படின்னு பார்த்தீங்கன்னா, அதிகப்படியான கால்ஷியம், மெக்னீஷியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, கே செலினியம் ஜிங்க் என ஏராளமான விட்டமின் சத்துக்களை கொண்ட, ஒரு அற்புதமான உணவுதான், இந்த ஆட்டுக்கால் சூப். இவ்வளவு சத்துக்கள் கொண்ட, இந்த ஆட்டுக்கால் சூப்ப நம்ம தினமும் சாப்பிட்டு வரும்போது, நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? மற்றும் குணமாகக்கூடிய நோய்கள் என்ன? அப்படிங்கிறதை பத்திதான் பார்க்கப்போகிறோம்.

1.மூட்டு வலியை குணமாக்கும்

மூட்டு வலி


பொதுவாக, மூட்டு வலி, மூட்டுகளுக்கு இடையே இருக்கக்கூடிய, வெனிஸ்கஸ் எண்ணும் பகுதியில், வறட்சி உண்டாவதன் காரணமாகவும், மூட்டுகளுக்கு இடையே, உராய்வு அதிகம் உண்டாவதன் காரணமாகவும் வந்து, இந்த மூட்டு வலி வந்து, உண்டாகும். இது போன்ற, மூட்டு வலி உண்டாகுறதுக்கு, பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மிக முக்கியமான காரணம் என்ன? அப்படின்னு பார்த்தீங்கன்னா, நம் உடல்ல, கொலாஜின் உற்பத்தி, குறைவாக இருப்பதுதான் வந்து, காரணம். அதிலும், குறிப்பா பாத்தீங்கன்னா வயதானவர்களுக்கும், வியாதியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இயல்பாகவே, இந்த கொலாஜின் சத்து, உடல்ல வந்து, குறைய ஆரம்பித்து விடும். இதன் காரணமாக, மூட்டு எலும்புகள்ல, அதிக வலியினால வந்து, அவதிப்படுவாங்க. அப்படிப்பட்டவங்க, இந்த ஆட்டுக்கால் சூப்ப தினமும் சாப்பிட்டு வர, மூட்டுகள்ள உண்டாகக்கூடிய வலி வந்து, நிரந்தரமா வந்து, குணமாகும்.

2.ஆத்ரிட்டீஸ்நோய் வராமல் தடுக்கும்


முடக்குவாதம்னு சொல்லக்கூடிய, ஆத்ரிட்டீஸ் நோய் வராமல் தடுக்கும் ஆற்றல், இந்த ஆட்டுக்கால் சூப்புக்கு உண்டு. அதிலும், நம் உடலில், ஆட்டோம்னியூ டிசார்டர் காரணமாக உண்டாகக்கூடிய, ரெமனாய்டு ஆத்ரிட்டீஸ்நோயை குணமாக்கும் ஆற்றல், இந்த ஆட்டுக்கால் சூப்புக்கு உண்டு. இது போன்ற, எந்த ஒரு ஆத்ரிட்டீஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், ஆட்டுக்கால் சூப்பை சாப்பிட்டு வர, இது போன்ற, எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் வந்து, விரைவில் வந்து குணமாக்கும்.


3.குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்


குடலில் ஏற்படக்கூடிய, புண்கள், எரிச்சல் மற்றும் குடல் சிதைவு, போன்ற நோய்களை குணமாக்கும் ஆற்றல், இந்த ஆட்டுக்கால் சூப்புக்கு உண்டு. மற்றும் இதில் இருக்கக்கூடிய (L) குளுட்டமைன் மற்றும் அதிகப்படியான அமினோ அமிலங்கள், ஜெலட்டின் போன்ற சத்துக்கள், குடலுக்கு நல்ல வலுவைக் கொடுத்து, IBSன்னு சொல்லக்கூடிய, குடல் இரைச்சல் பிரச்சனைகள், மற்றும் கட்லீகி போன்ற, குடல் சார்ந்த நோய்களைக் கூட, வேகமாக வந்து, குணமாறதுக்கு வந்து, உதவி செய்யும். அது மட்டும் இல்லாம, வயிற்றில் இருக்கக்கூடிய, நல்ல பாக்டீரியாக்களின் அளவையும் வந்து, அதிகரித்து, செரிமானம், சீராக நடைபெறுவதற்கும் வந்து, உதவி செய்யும்.

4.உடல் எடையை குறைக்கும்

உடல் எடை


உடல் எடையை குறைக்கிறதுக்காக, டயட் பின்பற்றுபவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவு, ஆட்டுக்கால் சூப்.ஆட்டுக்கால் சூப்பில் இருக்கக்கூடிய, அதிகப்படியான புரதச்சத்து, கொஞ்சம் சாப்பிட்டாலும், வயிறு நிரம்பிய ஒரு உணர்வை கொடுக்கும். அது மட்டும் இல்லாம, ஒரு நாளைக்கு தேவையான, களோரிகளும் வந்து கிடைத்துவிடும். இதன் மூலமாக பார்த்தீங்கன்னா, தேவையில்ல உணவு எடுத்துக்கொள்வது தடுக்கப்பட்டு, உடல் எடையை குறைக்க வந்து, உதவி செய்யும்.

5.எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும்.


எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான, கால்ஷியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள், அதிகம் நிறைந்தது, இந்த ஆட்டுக்கால் சூப். இது எலும்புகள், மற்றும் பற்கள் உறுதியாகவும், வலுவாகவும் இருக்கறதுக்கு வந்து, உதவி செய்யும்.அதனால் எலும்பு மற்றும் பல் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க, அவசியம் இந்த ஆட்டுக்கால் சூப்வந்து சாப்பிட்டு வாங்க.


6.உடல் நச்சுக்களை வெளியேற்றும்


ஆட்டுக்கால் சூப்பை வந்து, ஒரு சிறந்த டிட்டாக்டிபிக்காசன் சூப்புன்னு சொல்லுவாங்க. இதில் இருக்கக் கூடிய பொட்டாசியம் மற்றும் கிழைசின் போன்ற சத்துக்கள், கல்லீரலைத் தூண்டி உடலில், தேவையில்லாமல் இருக்கக்கூடிய, கழிவுகளை வந்து, விரைவில் வந்து, வெளியேற்றி, உடலை வந்து, சுத்தம் செய்யும். இதன் மூலமாக, உடல் ஆரோக்கியம், மேம்படுறது மட்டும் இல்லாம, புத்துணர்ச்சியாக இருக்கிறதுக்கும், உதவி செய்யக்கூடியது, இந்த ஆட்டுக்கால் சூப்.


7.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்


ஆட்டுக்கால் சூப்ல பாத்தீங்கன்னா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான, அர்ஜினைன் ,குளுட்டமைன் போன்ற அமின அமிலங்கள், அதிக அளவுல இருக்கு. இது, நம் உடலில், ரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியும், பலமாக இருக்கிறதுக்கு வந்து, உதவி செய்யும்.

இருதய ஆரோக்கியத்தை, மேம்படுத்தும். நம் உடலில், ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும், இருதய தசைகளை, பலப்படுத்தும் ஆற்றல், இந்த ஆட்டுக்கால் சூப்புக்கு உண்டு. ஆட்டு எலும்பு சூப்ல, இருக்கக்கூடிய, கிழைசின், என்ற நியூட்ரிசியன் பாத்தீங்கன்னா, இருதய தசைகள் சேதமடைவதை வந்து தடுக்கும். இதன் மூலமா பாத்தீங்கன்னா, இருதயம் நீண்ட நாட்கள் வந்து செயல்படுவதற்கு வந்து, உதவி செய்யக்கூடியது இந்த ஆட்டுக்கால் சூப். அதனால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராம தடுக்கணும். இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தணும், அப்படின்னு நினைக்கிறவங்களும், தாராளமா இந்த ஆட்டுக்கால் சூப் வந்து, பருகிட்டு வரலாம்.


9.தோல் சுருக்கத்தை தடுக்கும்

ஆட்டுக்கால் சூப் பயன்கள்


இளம் வயதிலேயே, தோல் சுருக்கங்கள் உண்டாவதற்கு, தோலுக்கு அடியில் இருக்கக்கூடிய, கொலாஜின் செல்கள், குறைவாதான் வந்து, காரணம். கொலாஜின் அதிகம் உள்ள, இந்த ஆட்டுக்கால் சூப்ப தினமும், நாம் சாப்பிட்டு வரும்போது, அது, உடலில், கொலாஜின் செல்களை வந்து, அதிகரித்து, தோலில் ஏற்பட்டுள்ள, சுருக்கங்கள் வந்து, விரைவில் வந்து, மறைவதற்கு வந்து, உதவி செய்யும். என்ன? நண்பர்களே! இன்னைக்கு இந்த ஆட்டுக்கால் சூப் குடிக்கிறதுனால, நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? அப்படிங்கிறதை பத்தி, விரிவா பார்த்திருக்கிறோம். இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய, இந்த ஆட்டுக்கால் சூப்பை இனி கட்டாயம் வாங்கி சாப்பிடுவீங்க, அப்படின்னு நான் நம்புறேன்.