எள் சாப்பிடுவதால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும்?… யாரெல்லாம் சாப்பிடவே கூடாது…

எள் விதைகளை நமது உடலுக்கு அதிகளவில் ஏற்படும் பக்கவிளைவுகளை விரிவாக விவரிக்கிறது இந்த கட்டுரை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை, நாம் எந்த தருணத்திலும் மறந்துவிடக் கூடாது. நாம் நமது உடலின் வளர்ச்சிக்கு பல்வேறு உணவு வகைகளை எடுத்துக்கொள்கிறோம். இந்த உணவு பொருட்கள், ஓரு குறிப்பிட்ட அளவு கொண்டதாகவே இருக்க வேண்டும்.

எந்த உணவாக இருந்தாலும் அதன் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், விரும்பத்தகாத பக்கவிளைவுகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். எள் விதைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நம் உடலின் ஆரோக்கியத்திற்கு எள் விதைகளின் பங்கு அளப்பரியது ஆகும். எள் உணவால், நமது உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. நம் உணவில், இதன் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பேணிக்காப்பதில், எள் முக்கிய பங்கு வகிக்கிறது. எள் விதைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம், , செரிமானத்தை மெதுவாக நடக்க செய்கிறது. இதன்காரணமாக, நமது உடலில் இன்சுலின் சென்சிட்டிவிட்டி குறைகிறது. இது நமது உணவில் சர்க்கரையை சிதைக்க செய்து , கணையத்தில் இன்சுலின் சுரப்பியின் செயலை அதிகரிக்க செய்கிறது. நமது உணவில் எள்ளின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், ரத்தத்தில் அதிக அளவிலான சர்க்கரை கட்டுப்படுத்தப்பட்டு, சர்க்கரையே இல்லாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

அதிக உயர்ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு, எள் விதைகள் சிறந்த தீர்வாக உள்ளது. எள் விதைகளில் உள்ள மினரல்கள், ரத்தத்தில் உள்ள உப்பின் அளவை கட்டுப்படுத்தி, பல்வேறு வகையான உபாதைகள் ஏற்படுவதை தடுக்க உதவுகின்றன. இரத்தத்தில், உப்பின் அளவு அதிகரிக்கும்போது, அது செல்களில், நீர் இழப்பை அதிகரிக்க செய்து விடுவதால், ரத்த அழுத்தம் அதிகரிக்க ஏதுவாக அமைகிறது. நம் உணவில், அதிகளவு எள் இருக்கும்போது, அது ரத்த அழுத்தத்தை அதிகளவில் குறைத்து விடுகிறது.

​குடல் அழற்சி ஏற்படுத்துகிறது

குடல் அழற்சி என்பது ஒரு வகையான நோய் ஆகும். இதில் குடலின் பின்பகுதி பெருக்கம் அடைந்து கடுமையான வலி ஏற்பட காரணமாக அமைகிறது. நமது உணவில் உள்ள செரிமானம் ஆகாத உணவுகளினாலேயே இந்த நிலை ஏற்படுகிறது.

எள் விதைகளில் உள்ள நார்ச்சத்து, செரிமானம் ஆகாத பொருட்களை கண்டறிந்து ஜீரணம் ஆக வழிவகை செய்து, கழிவுகளை மலம் வழியாக வெளியேற்ற உதவுகிறது. நார்ச்சத்து, உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாது, அதிகமாக உணவு உட்கொள்வதை தடுக்கிறது. செரிமானத்தை மெதுவாக நடைபெற உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள எள் விதைகளை, நம் உணவில் அதிகமாக சேர்க்கும் போது, அது குடல் பகுதியில் படிந்து அதன் அளவை விரிவடைய செய்து வீக்கங்களை ஏற்படுத்தி, அதிக வலி ஏற்பட காரணமாக அமைகிறது.

அனாபிலாக்சிஸ்

எள் விதைகளை நாம் அதிகமாக உணவில் சேர்க்கும்போது, அது நம் உடலில் அனாபிலாக்சிஸ் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகிறது. குமட்டல், சுவாசித்தலில் பிரச்சினை, அதிர்ச்சி உள்ளிட்டவைகள் இதன் அறிகுறிகள் ஆகும். எள் காரணமாக ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள்,எள் கலந்த உணவை எடுத்துக்கொள்வதற்கு முன், மருத்துவரிடம் தகுந்த ஆலோசனையை பெற்று செயல்படுவது உத்தமம்.

அதிக உடல் எடை

எள் விதைகளில் உள்ள நார்ச்சத்துகளை, நமது உடல் எளிதில் ஜீரணிக்க முடியாததால், அது நமது உடல் எடையை கணிசமான அளவிற்கு அதிகரிக்க செய்து விடுகிறது. நாம் சிறிய அளவிலான எள் கலந்த உணவை உண்டாலுமே, நமது உடல் எடை பெருமளவு அதிகரித்து விடுகிறது.

இந்த நார்ச்சத்தானது, செரிமானம் ஆகாமல், வயிற்றிலேயே தங்கி, நமது உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைந்து விடுகிறது

மற்ற பக்கவிளைவுகள்

எள் விதைகளை நாம் தகுந்த முன்னெச்சரிக்கைகளுடன் பயன்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், எள் கலந்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில், எள் விதைகளில் உள்ள ஆக்சலேட்டுகள், கீல்வாதத்தின் அறிகுறிகளை மிகவும் மோசமானதாக ஆக்கி விடுவதாக, மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.

நமது உடல் உறுப்புகளின் பல்வேறு பகுதிகளில் படிந்துள்ள தாமிர உலோகம், நமது உயிருக்கே ஆபத்தாக அமைந்து விடும் ஆபத்து உள்ளது. எள் விதைகளில் அதிகளவில் தாமிர சத்து உள்ளதால், வில்சன் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள், எள் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

எவ்வளவு உட்கொள்ள வேண்டும்?

நமது உடல் திறன், செயல்பாடுகள், உணவு முறை உள்ளிட்ட காரணிகளே, நமது உணவில் எவ்வளவு அளவிற்கு எள் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன.

வாரத்திற்கு, 40 முதல் 50 கிராம் அளவிலான எள் விதைகள் நமது உணவில் இருத்தல் நலம். இது வயது, உடல் அமைப்பு, செயல்திறன் அளவு உள்ளிட்டவைகளை பொறுத்து வேறுபடும்