வாய்வுத் தொல்லை – kusu thollai

 

 

உங்கள் ஜீரண மண்டலத்தில் உருவாகும் கேஸ் தான் உங்கள் ஆசனவாய் வழியாக வாயுவாக வெளியேறுகிறது. நீங்கள் உண்ணும் உணவு உடைக்கப்படும்போது உருவாகும் வாயு , நீங்கள் உணவு உண்ணும்போது பிற வாய் செயல்பாடுகளின் போதும் விழுங்கும் காற்றுதான் உங்கள் உடலில் இருந்து வாயுவாக வெளியேறுகிறது.

உங்கள் உடலில் இருந்து வெளியேறும் வாய்வு ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் மீத்தேன் ஆகியவை கலந்தது. ஒரு நபர் ஒரு நாளைக்கு 13 முதல் 21 முறை வரை வாய்வு பிரிதலை உணர்கிறார்கள். குடல் அழற்சி நோய், இரைப்பை வாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இதை விட அதிகமான முறையும், வலியுடனும் வாய்வு வெளியேறலாம்.

எல்லோருக்கும் பல காரணங்களால் மனஅழுத்தம், ஏன்சைட்டி, டிப்ரஷன் போன்ற உளவியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எந்த உணர்வு நமக்கு ஏற்பட்டாலும் அதை முதலில் உங்கள் அடிவயிற்று பகுதியில் உணர்ந்திருக்கிறீர்களா? உங்கள் மூளைக்கும் உங்களின் வயிற்று பகுதிக்கும் லின்க் உள்ளது.

எனவே, மனஅழுத்த பிரச்சனைகள் ஏற்படும்போது அது உங்கள் இரைப்பை குடல் அமைப்பை பாதிக்கிறது. இது உங்களின் உடல் உணவை பயன்படுத்தும் வழக்கமான நடைமுறையை மாற்றி அதிகமான வாயு உருவாக காரணமாகி விடுகிறது. இந்த வாயுதான் அதிகமாக வாயுவாக வெளியேறுகிறது.

மேலும், மனஅழுத்தத்தின் போது சிகெரட் பிடித்தல், அதிகமான கார்போ ஹைட்ரேட் உணவுகளை எடுத்து கொள்ளுதல் மற்றும் மது அருந்துதல் போன்றவையும் அதிகமான வாய்வு பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது.

எனவே, நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருந்தால், உங்களை கவனித்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். நன்கு சீரான உணவை உட்கொள்வதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் ஏனெனில், சீரான உணவை உட்கொள்வது உங்களை மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும்.

இது குறைந்த வயிறு உப்பசம் மற்றும் வாயுவுக்கு உதவும்.அதே போல் அதிகமாக தண்ணீரைக் குடிப்பது மிகவும் முக்கியம். மேலும், பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.

​சாப்பிடும்போது நிறைய காற்றை விழுங்கி இருக்கலாம்.

பொதுவாகவே நீங்கள் சாப்பிடும்போது கொஞ்சம் காற்றையும்தான் உள்ளிழித்து கொள்கிறீர்கள். அதே போல், நீங்கள் சாப்பிடும் உணவுகளும் கூட கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவாக இருக்கும் பட்சத்தில் இவை அதிகமான வாயுவை வெளியேற்ற காரணமாக இருக்கின்றன.

எனவே, உணவு மற்றும் சிற்றுண்டிகளை சாப்பிடும் போது, முடிந்த அளவிற்கு மெதுவாக சாப்பிடுங்கள். டிவி அல்லது தொலைபேசி போன்ற கவனச்சிதறல்கள் இல்லாமல் சாப்பிடுங்கள். மேலும், கொஞ்சம் கொஞ்சமாகவும் மற்றும் நன்றாக மென்றும் சாப்பிட வேண்டும்.

அதே போல், பீன்ஸ், முட்டைகோஸ், ப்ரோக்கோலி, பால் பொருட்கள், முழு தானியங்கள், வெங்காயம், கோதுமை, தக்காளி, கார்ன், பட்டாணி, ஆப்பிள் , பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடும் போதும் உங்களுக்கு அதிக்மாக வாய்வு வெளியேறலாம்.

மாதவிடாய்

பி.எம்.எஸ் இன் போது, இரைப்பை குடல் பிரச்சினைகளை அனுபவிப்பது மிகவும் பொதுவான ஒன்று. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்கள் இந்த அறிகுறிகளை ஏற்படுத்தும்” என்று டாக்டர் போர்கர் கூறுகிறார்.

உடற்பயிற்சி செய்வது, அதிக தண்ணீர் குடிப்பது மற்றும் சோடியம் குறைவாக உள்ள உணவை உட்கொள்வது மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைவாக எடுத்துக்கொள்வது போன்றவை பி.எம்.எஸ்ஸை எளிதாக்க உதவும் என்று அவர் கூறுகிறார்.

தூக்கமின்மை

மன அழுத்தம் காரணமாகவோ, உங்களின் வேலை காரணமாகவோ, அல்லது உங்கள் மொபைலில் நீங்கள் அதிக நேரம் செலவிடுவதன் காரணமாகவோ உங்களின் தூக்கம் ஆனது பாதிக்கக்கூடும். தூக்கமின்மை ஒரு மன அழுத்த சூழ்நிலையை உருவாக்குகின்றது. நம் உடல்கள் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனை வெளியிடுகின்றன, இது வயிறு உப்பசம் மற்றும் வாய்வு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று டாக்டர் போர்கர் கூறுகிறார்.

இதற்கான தீர்வு:

வயதானவர்களுக்கு தினமும் ஏழு முதல் ஒன்பது மணிநேர தூக்கம் தேவை என்று தேசிய தூக்க அறக்கட்டளை ஆனது பரிந்துரைக்கிறது. எனவே, இரவு சீக்கிரம் தூங்க செல்வது மிகவும் நல்லது.

உங்கள் மருந்துகள்

நீங்கலாக மருந்து கடைகளில் வாங்கும் மருந்துகள், அல்லது உங்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், அத்துடன் சப்ளிமெண்ட்ஸ் போன்றவை வாயுவை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, ஐ புரூஃபன் மற்றும் ஆஸ்பிரின் போன்ற மருந்துகள். இது போன்ற மருந்துகள், உங்களின் தலைவலியைப் போக்கவும், தசை வலியைக் குறைக்கவும் அல்லது பி.எம்.எஸ் ஐ எளிதாக்கவும் ஒரு சிலரால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இவை வாயு, வயிறு உப்பசம் மற்றும் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படக்கூடிய பொதுவான மருந்தான மெட்ஃபோர்மின் கூட வாய்வுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஒரு ஆய்வின்படி, இரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்க உதவக்கூடிய இரும்புச் சத்துக்கள் , வாய்வு உட்பட இரைப்பை குடல் பக்க விளைவுகளின் அபாயத்தை இரட்டிப்பாக்குகின்றன என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஐ புரூஃபன் மற்றும் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை உணவுடன் அல்லது ஒரு ஆன்டசிட் உடன் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஏதேனும் மருந்துகள் எடுத்துக் கொண்டு இருந்தால், பின்பு உங்கள் மருத்துவரிடம் அதனை மாற்றுவது பற்றி ஆலோசனை செய்யுங்கள். உங்கள் உடலுக்கு ஏற்ற சில மருந்துகளை உங்கள் மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கலாம். ஏனெனில், மருத்துவரிடம் கலந்துரையாடாமல் உங்கள் மருந்துகளை நீங்கள் நிறுத்தக்கூடாது.

​செரிமான பிரச்சினை

பெருங்குடல் அழற்சி உள்ளிட்ட ஒரு சில செரிமான மண்டல பிரச்சனைகளும் கூட அடிக்கடி வாய்வு வெளியேறுவதற்கான காரணமாக அமைகிறது. குடல்பகுதிகளில் பாக்டீரியாக்கள் அதிகமாக வளர்ந்து அவை இந்த செயல்முறைக்கு காரணமாகின்றன.

ஆசனவாய் வழியாக வாயு வெளியேறுவது இயல்பானது தான். ஆனால், அடிக்கடி வருவதாக நீங்கள் உணர்ந்தால் அல்லது பிற அறிகுறிகளுடன் (வயிற்று வலி அல்லது மலம் கழிக்கும் செயல்முறையில் ஏற்படும் மாற்றங்கள்) இது ஏற்பட்டால், உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.