நாம் ஏன் அழுகிறோம் ? why do we cry in tamil

 நாம் ஏன் அழுகிறோம் why do we cry?

eye tears
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் மனிதர்கள் அனைவருக்கும் இருக்ககூடிய நம் உடலில்  இருக்கூடிய பொதுவான ஒரு பண்பு இந்த அழுகை என்று கூறலாம் நம் திரைபடங்களில் உணர்ச்சிபூர்வமான காட்சியை பார்த்தாலோ அல்லது நம்  மனதிற்கு பிடித்தவர் நம்மை விட்டு  பிரிந்தாலோ அதுமட்டுமில்லாமல் நம் கண்களில் ஏதாவது பட்டாலோ நமக்கு அழுகை என்பது வரும் எப்படி இந்த அழுகை நமக்கு ஏன் வருகிறது அழுக்கைக்கும் நம்முடைய உணர்ச்சிக்கும் என்ன சம்மந்தம் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக காணலாம்.
 

கண்ணீருக்கான காரணம்

why do we cry
உண்மையில் கண்ணீர் என்பது அழுவதற்கு மட்டும் கிடையாது, கண்ணீரானது நமது கண்களை தூய்மைபடுத்துவதற்கும் , ஈரத்தன்மையுடன் வைப்பதற்கும், நாம் இமைகளை மூடித் திறக்கும்போது ஏற்படும் உராய்வைத் குறைக்கவும் பயன்படுகிறது. நாம் உணர்ச்சி வசபட்டாலோ அல்லது நம் கண்களில் ஏதாவது பட்டாலும் கூட அழுகை வரும்

கண்ணின் திரைகள்

eyes
நமது கண்ணானது மூன்று அடுக்குகளைக் கொண்டது. முதல் அடுக்கு லிபிட் அடுக்கு என கூறலாம் இதில் அதிகமாக கொழுப்பு காணப்படும் . இரண்டாவது அடுக்கு நீர் அடுக்கு இங்குதான் காணப்படும் லாக்ரிமல் கிளாண்ட் பகுதி காரணமாகதான் கண்ணில் கண்ணீர் ஏற்டுகிறது. அடுத்து இருப்பது லாக்ரிமல் டப்டு இது கண்ணீரை முழுவதுமாக வெளியே விடாமல் தடுக்கிறது . முதல் அடுக்கு கண்ணீர் வழிந்து கன்னங்களில் வழியாமல் தடுக்கிறது. இரண்டாவதாக இருக்கும் நீர் அடுக்கு கண்களில் தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. மூன்றாவது அடுக்கு சளி அடுக்கு இது விழி வெண்படலத்தின் மேல் காணப்படுகிறது இது கண்ணீர்த்திரை சமமாக இருக்க உதவுகிறது.
 

அழுகையின் வகைகள்

tears
அழுகை நம் மன அழுத்தத்தைக் குறைத்து, நம்முடைய மனதை லேசாக்குகிறது. அழுகை என்பது உடலுக்கு நல்லது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கண்ணீர் என்பது நம் கண்களில் அமைந்துள்ள கண்ணீர் சுரப்பிகளிலிருந்து உண்டாகிறது. இநுத கண்ணீரிலேயை மூன்று வகை உண்டு.

அடிப்படை கண்ணீர் (Basel tears)

இது நமது கண்களை பாதுகாக்க உருவாகும் ஒரு வகை கண்ணீர் இது நமது கண்களை ஈரப்பசையுடன் வைக்கவும், கண்களில் விழக்கூடிய தூசிக்களை அகற்றவும் உதவுகிறது.

எதிர்வினைக் கண்ணீர் (Reflex tears):

நமது கண்களில் ஏதாவது விழுந்து விட்டாலோ, அதிக நெடியின் காரணமாக கண்கள் பாதிக்கப் பட்டாலோ, அல்லது நாம் இருமும்போதும், தும்மும்போதும், வெங்காயம் நறுக்கும்போதும் வருவது இந்தவகை எதிர்வினை கண்ணீர் ஆகும்.

உணர்வுசார் கண்ணீர் (emotional tears)

emotional tears
அதிகமான உணர்ச்சியின் வெளிப்பாடான, கோபம், பயம், மன அழுத்தம், துக்கம், சில சமயம் மித மிஞ்சிய சந்தோஷம் இவை இந்த கண்ணீர் வருவதற்கான காரணமாக உள்ளது.
மின்னசோட்டா பல்கலைக்கழக மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த உணர்வுசார் கண்ணீர் நம் உடலுக்கு பிகவும் பயன்தரக்கூடியது என கூறுகிறார்கள். இந்த உணர்வுசார் அழுகை வர காரணம் மனிதன் பரிணமத்திலிருந்தே இருந்துள்ளது இந்த அழுகையின் மூலம் நாம் மற்றவர்களின் கவனத்தை பெறுவோம் இதற்காகதான் அனைவருக்கும் அழுகை வருகிறது. இந்த உணர்வுசார் கண்ணீர் நம் உடலில் மன அழுத்தத்தையும், கவலையையும் சேர்த்து வெளியேற்ற உதவுகிறது. சராசரியாக ஆண்களை விட பெண்கள்தான் 4 மடங்கு அதிகம் அழுகிறார்கள். பெண்கள் உணர்வுகளில் வாழ்கிறார்கள் ஆனால் ஆண்களோ எல்லாவற்றையும் வெளிக்காட்டாமல் மனதிலேயே அடக்கிக் கொள்ளுகிறார்கள். ஆண்களைப்போல் குழந்தைகளும் பிறந்த மூன்று மாதத்திற்கு கண்ணீர் வடிப்பதில்லை. ஆண்கள் ஒரு வருடத்தில் சிலமுறைlqif அழுகிறார்கள். ஆனால் பெண்கள் மாதத்தில் ஒருமுறையாவது அழுகிறார்கள்.
 
cries

 

உணர்வு சார் கண்ணீர் பலசமயங்களில் மன அழுத்தத்தை குறைக்க பயன்படும். அதனால்தான் சிலர் தனிமையில் அழுகிறார்கள். அழுதபின் நம் மனது புத்துணர்வு பெறுவதும் இதனால்தான். உணர்வு சார் கண்ணீரில், மற்ற இரண்டு கண்ணீர்களில் இல்லாத மாறுபட்ட இரசாயனப் பொருட்கள் இருக்கின்றன; இவை நமக்கு ஓர் இயற்கையான வலி நிவாரணியாக செயல் படுகிறது. அதன் காரணமாகவே நம் மன அழுத்தம் குறைகிறது.
உணர்வுசார் கண்ணீர் வருவதற்கு மிகப் பலமான, உணர்வு பூர்வமான தூண்டுதல் இருக்க வேண்டும். யாரும் சும்மா அழுவதுபோல நடிக்க முடியாது. அழுகையோ, சிரிப்போ உணர்வு பூர்வமான சூழலை மூளை உணர வேண்டும். அதனால் ஒருவர் அழும்போது மூளையின் பல பகுதிகள் வேலை செய்கின்றன. இதன் காரணமாக, உடல்ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அழுகையோ, சிரிப்போ முகத்தின் தசைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதயத் துடிப்பு, மூச்சுவிடும் அளவு இவை அதிகரிக்கின்றன. குரலும் மாறுகிறது.
ஆனால் சிலர் (முக்கியமாகப் பெண்கள்) அதிகம் அழுவதற்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை. சமூகத் தாக்கம், சூழ்நிலைகளைக் காரணம் காட்டலாம். பெண்களை விட ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப் படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புவதால், அவர்கள் அழுவதை சமூகம் ஏற்றுக் கொள்ளுவதில்லை. இதனாலேயே ஆண்கள் தங்களது மன அழுத்தத்தை சரி செய்ய நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளுகிறார்கள்.
நமக்குப் பிடித்தவர்களின் அருகாமையில், அண்மையில் அழுது, நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது நேர்மறையான விளைவுகளை கொடுக்கும். ஒருவர் அதீதமான மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது இதயத் துடிப்பு அதிகமாகிறது; வியர்வை பெருகுகிறது. அழுவது இதயத் துடிப்பை நிதானப் படுத்தி, அமைதியைக் கொடுக்கிறது.

கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியுமா?

cry
கண்ணீரை கட்டுபடுத்த தவையில்லை ல்லை என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். உளவியலின் படி உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பின் அழுகையாக மாறுகிறது. அதனால் அழுகையை அடக்குவது சரியான செயல் அல்ல என்கிறார்கள். அழுவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்கள் அழுவது நல்லதல்ல. இது மனச் சோர்வின் அறிகுறி. மிக நெருங்கியவர்களின் மரணம், காதல் தோல்வி முதலியன ஆண்களை அழவைக்கின்றன. ஆண்கள் அழுவதைப் பற்றி ஆண்கள் என்ன சொல்லுகிறார்கள்? ஆண்கள் உணர்வுபூர்வமானவர்கள் என்பதைக் காண்பிப்பதாக 32% ஆண்கள் கூறுகிறார்கள். அழும் ஆண் உண்மையானவன் என்று 29% கூறுகிறார்கள். ஆண் அழுவதை ஏற்றுக் கொள்ளுவதாகவும் அழுவதால் தங்களது ஆண்மைக்கு இழுக்கு இல்லை என்றும் 20% கூறுகிறார்கள். அழுவது தங்களது பலவீனத்தைக் காட்டுகிறது என்று 19% சொல்லுகிறார்கள்.எப்படி கூறினாலும் அனைவருக்கும் அழுகை என்பது பொதுவானதே என்பதே மறந்துவிடாதீர்கள்.
நன்றி!